Deepavali 2024 Summary
-
by
Tech ATM
அட்லாண்டா தமிழ் மன்றத்தின் தீபாவளி கொண்டாட்டம், அக்டோபர் 19-ஆம் நாள் அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மன்றத்தின் உறுப்பினகர்ளும், உறுப்பினர் அல்லாதவர்களுமாக சுமார் 2000 பேர் கலந்து கொண்ட பெருவிழாவாக அமைந்தது.
இந்த ஆண்டின் தீபாவளி கொண்டாட்டங்கள், கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. முதலாவதாக, மன்றத்தின் இளைஞர் பாடகர் குழுவின் (Youth Band) தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கியது. பின்பு, சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்ட பல்சுவை நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக அமைந்திருந்தது. பாட்டு, நடனம், நாடகம் என்று அனைத்து வகை கலை நிகழ்ச்சிகளையும், காண்போர் அனைவரும் கண்டு, கேட்டு களித்தனர்.
சுமார் 40 குழுக்களும், 420-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், மன்றத்தின் கலைக்குழுவினரால் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்ற மேற்கு போர்சைத் உயர் நிலை பள்ளி மேடையும், வளாகங்களும் வண்ணமயமாக அலங்கரிக்க பட்டிருந்தது. வளாகங்களில் விற்பனைக்காக 30-க்கும் அதிகமான சாவடிகளும் (Stalls) அமைக்கப்பட்டிருந்தது.




